Tamil Sri Admin

நிர்மாணிக்கப்பட்ட சில மாதங்களில் உடைந்துபோன குளக்கட்டு (படங்கள்)

அம்பாரை மாவட்ட திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு உடைந்துள்ளபோதும் இன்றுவரை எந்த அரச அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கைளையும் மேற்கொள்ளவி்லலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கவலை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அமைக்கப்பட்ட தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு சில மாதங்களிலேயே உடைந்துபோனது. ஆனால் இன்றுவரை இது குறித்து எந்த அரச அதிகாரிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதமளவில் சேதமடைந்த அணைக்கட்டு காராணமாக இக்குளத்தின் நீர் சேமிப்பு வீதம் கால் வாசியாக குறைந்துள்ளது. இதனால் இம்முறை இடைப்போக வேளான்மை செய்கை பல நூறு ஏக்கர் முற்று முழுதாக கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாது அக்குளத்தில் மீன்பிடித்து வாழ்வை நடாத்திச் சென்ற பல மீனவர்கள் இவ்வருடம் கூலித்தொழிலுக்காகச் செல்வதுடன்,  இக்குளத்தில் நீர் இல்லாததால் நூற்றுக்கணக்கான கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கோடை காலத்தில் சேனைப்பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும் அவர்களின் தற்காலிக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நன்மை கருதி இம்மாரி காலத்திற்கு முன்னர், உடைந்த இந்த தாமரைக்கேணி குளக் கட்டை திருத்தி நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார். 
பைஷல் இஸ்மாயில், காமில் நூர்தீன் -



Tamil Sri Admin

About Tamil Sri Admin -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :
......