Tamil Sri Admin

வைத்தியர்களுக்குள் நிலவுகின்ற பிரச்சிணைகளுக்கு தீர்வு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கி வருகின்ற அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள ஆயர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்குள் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரினால் தீர்வு வழங்கி வைக்கப்பட்டது. 
ஆலயடிவேம்பு - புளியம்பத்தை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக திறப்பு விழா நேற்று (10) இடம்பெற்றதையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபில் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வைத்தியர்கள் பலர் தங்களுக்குள் நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளை தரும்படி ஆணையாளரிடம் முன்வைத்தனர்.
வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் அவர்களினால் தீர்வு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பைஷல் இஸ்மாயில் -

Tamil Sri Admin

About Tamil Sri Admin -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :
......