Tamil Sri Admin

பொது இடத்தில் மது அருந்திய நால்வர் பொலிஸாரால் கைது


வவுனியா நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.



நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எ.ஸ் அத்தனாயக்க தலமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று வீதியில் மதுவருந்திய 21, 22, 25, 41 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளனர்.


குறித்த நால்வரையும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Tamil Sri Admin

About Tamil Sri Admin -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :
......