ஏ.ஆர்.எம்.ரபியூதீன் அநுராதபுரம் நிருபர்
வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை மீள் நிரப்புவதற்காக மேலும் 382 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு இரண்டாம் கட்டமாக கடந்த 9 ஆம் திகதி நியமனம் பெற்றனர்.
தமிழ் மொழி மூலம் 177 பேரும், சிங்கள மொழி மூலம் 179 பேரும் ,புத்த சமய பாட போதனைக்கு 26 பேரும் என மொத்தம் 382 பேர் தமது நியமனத்தை பெற்றுக் கொண்டனர்.இது தவிர கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் வைத்து 486 பட்டதாரிகள் நியமனம் பெற்றனர்.
கடந்த செப்டம்பர் 25 ல் வழங்கபட்ட நியமனத்துக்கு உட்படாத வ.ம. மாகாண பட்டதாரிகள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி வ.ம. மாகாண சபையின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து ,முரண்பாடுகள் நீக்கப்பட்டு இரண்டாம் கட்ட நியமனம் வழங்கப்பட்டது.
இந் நியமனம் வ.ம. மாகாண சபை கேட்போர் கூடத்தில் வ. ம. மாகாண ஆளுநர் பீ. பி. திஸாநாயக்க தலைமையில் நியமனக் கடிதங்கள் கையளிக்கப் பட்டன.