• 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்த மோசடி இடம்பெற்றது.
  • மூன்று வருடங்களுக்கு முன்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் பதவி வகித்தபோது, 30 வருடங்களில் முதிர்ச்சியடையும் பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதாக அறிவித்தார்.

  • ஏலத்தின் நிறைவில் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு, 20 பில்லியன் ரூபா வரை முறிகளை விநியோகிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் தீர்மானித்தார்.

  • மத்திய வங்கி அதிகாரிகளின் எதிர்ப்பினால் அது 10 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டது.

  • 10 பில்லியனுக்கும் அதிகமான நிதி, 12.05  எனும் வழமைக்கு மாறான வட்டி வீதத்திற்கு அமைவாக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

  • அப்போதைய நடைமுறை வட்டி வீதம் 9.85 வீதமாகும்.

  • மற்றுமொரு முதல் நிலை கொள்வனவாளரான இலங்கை வங்கி, பேர்ப்பச்சுவல் நிறுவனத்திற்காக விலை மனு கோரியமை தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வௌியிட்டனர்.

  • ஊடக வௌிக்கொணர்வு மற்றும் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளித்தார்.

  • கடந்த அரசாங்கத்தின் ஊழல் காரணமாக முறிகள் விநியோக நடைமுறையில் தாம் மாற்றத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.

  • டியூ குணசேகர தலைமை தாங்கிய கோப் குழு, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.

  • விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் அந்தக் குழு கலைக்கப்பட்டு, விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

  • முறிகள் ஏலத்தின் போது பிரதமர் வழங்கிய ஆலோசனைக்கமையவே செயற்பட்டதாக அர்ஜூன மகேந்திரன், டியூ குணசேகரவின் கோப் குழுவிற்கு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

  • பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்தது.

  • அந்த கோப் குழு அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்குறிப்பிட்டனர்.

  • அடிக்குறிப்புகள் பரிந்துரைகளில் தாக்கம் செலுத்தியதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

  • எதிர்ப்பிற்கு மத்தியில், ஜனாதிபதியால் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

  • 11 மாதங்களாக ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் நாட்டிற்கு வெளிப்படுத்தப்பட்டன.

  • கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

  • ஜனாதிபதி அதனை சபாநாயகரிடம் கையளித்தார்.

  • அறிக்கையூடாக பல விடயங்கள் அம்பலமாகின.

  • பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சாதகமான வகையில், அர்ஜூன மகேந்திரன் செயற்பட்டார்.

  • அவரின் மருமகனான அர்ஜூன் அலோசியஸ் அந்த உறவு முறையைப் பயன்படுத்தி, ஏலத்தில் பாரிய அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டார்.

  • ஆணைக்குழுவின் வெளியான தகவல்களின் பின்னர், ரவி கருணாநாயக்க அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

  • அர்ஜூன மகேந்திரன் மற்றும் முன்னாள் பிரதி ஆளுநர் பீ.சமரசிறி ஆகியோர் பிரதமருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினர்.

  • கணக்காய்வு மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்தது.

  • அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

  • ரவி கருணாநாயக்க பின்வரிசை உறுப்பினரானார்.

  • சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.