உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.
இதற்கினங்க ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.
பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமில் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது, ஹட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தபால் மூலமாக வாக்களித்தனர்.