புதுவருடத்தை முன்னிட்டு தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நகரசபைக்கு சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வந்த அங்காடி வியாபாரிகள் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக தற்காலிகமாக நகரசபைக்கு இடமாற்றம் செய்துள்ள நிலையில் வீதி ஓரங்களில் புதிதாக வியாபாரம் செய்வதற்கு வேறு நபர்களுக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளதால் புதுவருட தினத்திற்கான தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் நகரசபை வாக்குறுதி வழங்கியது போல் மிக விரைவாக பழைய இடத்தை செப்பனிட்டு தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.