லன்ச்சீட், பொலித்தீன் மற்றும் அதன்மூலம் தயார் செய்யபபட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நாளை முதல் அமுலுக்கு வருகிறது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

லன்ச்சீட், பொலித்தீன் மீது கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த பொருட்களின் பாவனையை விலக்கிக்கொள்வதற்காக, நாளை வரை சலுகை காலம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய தேசிய, சமய மற்றும் அரசியல் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் லன்ச்சீட், பொலித்தீன்களை பயன்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் லன்ச்சீட், பொலித்தீன் விற்பனை தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தெரிவித்தார்.