உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை பிற்­போட்­டு­விட்டு மாகாண சபை­களின் கால எல்­லை­யையும் நீடிக்க முனை­வது மக்கள் இறை­மையை மீறும் செயற்­பா­டாகும். எனவே இதற்கு சர்­வ­ஜன வாக்­கு­ரிமை கோரப்­பட வேண்டும் என குறிப்­பிட்டு உயர் நீதி­மன்­றத்தில் வழக்­கொன்­றை தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துளார்.  
முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச மாகாண சபை தேர்­தல்­களை காலம் தாழ்த்­து­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் நேற்று விடுத்­துள்ள விசேட ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­படி விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது.
மாகாண சபை தேர்­தல்­களை காலம் தாழ்த்­து­வ­தற்­காக 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்த்தம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சப­ர­க­முவ, கிழக்கு , வட­மத்­திய மாகாண சபை­களிக் கால எல்லை ஒக்­டோபர் மாத்தின் முதற்­ப­கு­தியில் நிறை­வ­டைந்­து­விடும். ஆனால் 20 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டு­விட்டால் இவ்­வ­ரு­டத்­திலும் அடுத்த வரு­டத்­திலும் கால எல்லை நிறை­வ­டையும் மாகாண சபை­களின் காலம் 2019 ஆம் ஆண்டு வரையில் நீடிப்பு செய்­யப்­படும்.
இவ்­வாறு மாகாண சபை­களின் காலத்தை நீடித்து தேர்­தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்­து­வது மக்­களின் இறைமை அடிப்­ப­டை­யி­லான தேர்தல் உரி­மையை கேள்­விக்கு உள்­ளாக்கும் செயற்­பா­டாகும். கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு முன்பு நடத்­தப்­பட வேண்­டிய தேர்­த­லையும் பிற்­போட்­டுள்ள நிலை­யி­லேயே தற்­போ­தைய அர­சாங்கம் இவ்­வா­றா­ன­தொரு செயற்­பாட்­டினை முன்­னெ­டுக்­கின்­றது.
2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திக­தி­யன்று சூழ்ச்­சியால் ஆட்­சியை பிடித்த அர­சாங்­கத்தின் மற்­று­மொரு சூழ்ச்­சியே மாகாண சபை தேர்தல் காலம் தாழ்­தப்­ப­டு­வ­தற்­கான திருத்தச் சட்­ட­மாகும். 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திக­தியே இந்த அர­சாங்­கத்தின் ஜன­நா­ய­கத்தை தலை­கீ­ழாக புரட்­டிப்­போடும் செயற்­பா­டுகள் ஆரம்­பித்­தன. 144 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு இருந்­த­வரை பிர­த­ம­ராக நிய­மிக்­காமல் 44 பேரின் ஆத­ரவு மாத்­தி­ரமே இருந்த ஒருவர் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
ஐக்­கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஆகிய பல தரப்­புக்­களின் உத­வி­யிடன் சுதந்­திர கட்­சியின் தலைமைப் பொறுப்­பையும் தற்­போ­தைய தலைவர் தனது கையில் எடுத்தார். அப்­போ­தி­ருந்த நீதி­ய­ர­சரை ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­லி­ருந்து அனுப்­பப்­பட்ட ஒரு காகி­தத்­துண்­டினை காண்­பித்து நீக்­கி­விட்­டார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பிர­தான வாக்­கு­று­தி­யாக நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வது என்று கூறப்­பட்­டாலும் 19 ஆவது திருத்­தத்தில் நிறை­வேற்று அத­காரம் நீக்­கப்­படும் என்று கூறப்­பட்டு மக்கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்கள். நிறை­வேற்று அதி­காரம் முன்பை விடவும் வலுப்­பெற்றே காணப்­ப­டு­கின்­றது.
நாம் அனை­வரும் அர­சி­ய­லுக்கு பிர­வே­சிக்க வழி­ச­மைத்து தந்த கட்­சியை பிள­வு­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது என்ற கார­ணத்­தி­னாலே 2015 ஆம் ஆண்­டிலும் நான் சுதந்­திர கட்­சியில் போட்­டி­யிட்டேன். அப்­போது எனக்கு பிர­தமர் பத­வியை வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­து­விட்டு தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்­ன­தாக நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் செய­லா­ளரை பதவி நீக்­கி­விட்டு தேர்தல் முடி­வையும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மாற்­றி­ய­மைத்தார். இவ்­வா­றான பின்­ன­ணியில் நடந்த ஒரு தேர்தல் எவ்­வாறு நியா­ய­மா­ன­தாக அமையும்?
அதன் பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பினை சேர்ந்த ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வான 40 பேருக்கு அமைச்சு பதவி வழங்­கப்­பட்­டது. அதில் சிலர் தேசிய பட்­டி­யலில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­ட­வர்கள். அத்­துடன் 51 பேர் இருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பினை விடுத்­து­விட்டு 17 பேர் மாத்­தி­ரமே இருந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட்­டது. இவ்­வாறு எதிர்க்­கட்­சி­யையும் தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொண்டு முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­று­வ­தாக கூறி­விட்டு அதிலும் தமக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டது.
இவ்­வா­றான நிலையில் இன்று கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்­தத்தை ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் சக­லரும் எதிர்த்தால் அதனை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­கான மூன்­லி­ரண்டு பலம் இல்­லாது போய்­விடும். இது மக்­களின் இறை­மை­யுடன் தொடர்­பு­பட்ட விடயம் என்­பதால் சர்­வ­ஜன வாக்­கு­ரி­மையும் வேண்டும். அதனால் குறித்த விடயம் குறித்து உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். இதற்கான அனைத்து சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கைகோர்க்க வேண்டியது அவசியமாகும்.
இந்த அரசாங்கத்திற்கு மாகாண சபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் தற்போது காலம் நிறைவடையவுள்ள மாகாண சபைகளையும் அதற்கு அண்மித்த காலங்களில் நிறைவடையவுள்ள மாகாண சபைகளையு கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டுமே தவிர 2019 வரையில் தேர்தல்களை பிற்போடக்கூடாது. (வீ)