பாரா­ளு­மன்ற உறுப்­பி னர்­க­ளுக்­கான உத்­தேச நடத்தைக் கோவையின் இறுதி வரைவை சபா­நா­யகர் கரு­ ஜ­ய­சூ­ரிய நேற்று சபைக்கு சமர்ப்­பித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்ற உத்­தேச நடத்தைக் கோவையின் இறுதி வரைவை சமர்ப்­பித்து சபா­நா­யகர் உரை­யாற்­று­கையில்,   
சட்­ட­வாக்­கத்தின் மதிப்பும் கௌர­வமும் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கும், சட்­ட­வாக்க உறுப்­பி­னர்கள் என்­ற­வ­கையில் எம்­மிடம் இருந்து எதிர்­பார்க்­கப்­படும் அவ­சி­ய­மான உயர்­மட்டம் தொடர்பில் பொது­மக்­களின் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் நிமித்­தமும், உறுப்­பி­னர்­களின் பாரா­ளு­மன்ற அர்ப்­ப­ணிப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் அவ­சி­ய­மாக இருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவை எதிர்­வரும் தின­மொன்றில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அந்த வரைபை சமர்ப்­பிப்­பது வர­லாற்று ரீதி­யான தரு­ண­மொன்­றாக குறிப்­பிட விரும்­பு­கிறேன்.
பல்­வேறு மட்­டங்­க­ளி­லான உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு நிபு­ணர்கள் மற்றும் கல்­வி­மான்­க­ளு­ட­னான ஆராய்­தல்­களின் போது முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்­களை முறை­யாக மதிப்­பீடு செய்து வரை­வாகத் தயா­ரித்து சில மாதங்­க­ளுக்கு முன்னர் சகல எம்.பி.க்களுக்கும் வழங்­கப்­பட்­டதன் பின்னர் கிடைக்­கப்­பெற்ற பல்­வேறு கருத்­துக்கள் மற்றும் யோச­னைகள் அனைத்­தையும் ஆராய்ந்து பார்த்து இறுதியாக சட்ட வரைஞரினதும் உதவியுடன் உரிய முறையில் இந்தகோவை தயாரிக்கப்பட்டதாக இந்தசபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  (வீரகேசரி)